முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் யார்?


♥️ *கதை-320*♥️


*“உண்மையில் நாம் யார் என்பதை நமக்குள்ளாகவே நம்மால் அடையாளம் காண முடிகிறதா? ”*
ஒரு பேரரசரின் மகன் ஒருவன் மோசமான நபர்களின் தொடர்பில் சிக்கி கெட்டுப் போய் விட்டான். அவனுடைய அப்பா, மிகவும் வருத்தம் கொண்டார். ஒரு நாள், அப்பா மிகவும் கோபத்திற்கு ஆளாகி, ஆத்திரம் அடைந்து ,“ இனிமேலும் இதேபோல கெட்ட நபர்களோடு இருந்தால் உன்னை அரண்மனையை விட்டு வெளியேற்றி விடுவேன். உன்னை நீயாகவே சரிசெய்து கொள்ள வேண்டும்; இல்லை என்றால், என்னுடைய அரண்மனையை விட்டு கிளம்பி விடு.” என்று கூறினார்.

 அந்த பேரரசர், அந்த இளவரசர் உண்மையிலேயே அரண்மனையை விட்டுப் போய் விடுவார் என்று நினைக்கவில்லை.ஆனால் இளவரசன், அவனுடைய கோபத்தினால் அரண்மனையை விட்டு கிளம்பி போய் விட்டான்.

 அந்தப் பேரரசரின் மகனும், அந்த பேரரசரைப் போன்றே, பிடிவாதமான குணம் உடையவன். அந்த அப்பா அவனை நிறையவே தேடினார். ஆனால் அவனைக் கண்டு பிடிக்க முடியவே இல்லை. வருடங்கள் கடந்தன.   

 அவருக்கு அவன் ஒரே மகன். இந்த முழுமையான சாம்ராஜ்யமும் அவனுக்கே உரியது. அந்த அப்பா, மிக அதிக அளவு வருத்தமடைந்தார். அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். அந்தக் கணத்தில் நான் கூறிய அந்த கடுமையான வார்த்தைகள்,“ அவையே உன்னை போகும்படி செய்து விட்டன. நானே உன்னை, வெளியே எறிந்து விட்டேன் என்று கவலை கொண்டார். 

 கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்து போயின; எனது காத்திருப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.”

 ஒரு நாள் அரண்மனைக்கு வெளியே, ஒரு பிச்சைக் காரன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அந்த பேரரசர், பிச்சைக் காரனைப் பார்த்தார். அந்த முகம் தனக்கு மிகவும் பரிச்சயமான முகம் என்று உணர்ந்தார். 

 அந்த வயதான அப்பாவின் இதயம், உடனே அவனை அடையாளம் கண்டு கொண்டு விட்டது. அவரது கண்களில் திரும்பவும் ஒளி வந்து விட்டது. அவரது இதயம் கூறியது,“இது என்னுடைய மகன் !!”

 ஆனால், இருபது வருடங்களில், அந்த மகன் தான், ஒரு பேரரசரின் மகன் என்பதை முழுவதுமாக மறந்து போய் விட்டான். 20 வருடங்களாக வறுமையில் வாடும் யார் ஒருவரால்தான், இவ்வாறு மறக்காமல் இருக்க முடியும் !. இருபது வருடங்களாக, அவன் கிராமம் கிராமமாக, வாசல் தோறும் சென்று சாதாரண ரொட்டித் துண்டுகளுக்காக பிச்சை எடுத்தான். ஆண்டுகள் இருபதாக பிச்சை எடுப்பு தொடர்கிறது. இந்த அடுக்குகளே சேர்ந்து குவிந்தன; மேலும், மேலும் சேர்ந்தன; அவன் மறந்தே போய் விட்டான், தான் ஒரு காலத்தில் பேரரசர் ஒருவரது மகனாக இருந்ததையே முற்றிலும் மறந்து போனான். 

 ஒரு இடத்திலிருந்து வேறொரு இடம் என்று மாறி மாறி சென்று கொண்டே இருந்தான். எல்லா இடங்களிலும் கூர்மையான சொற்களால் வசை பாடப் பட்டான். ஏளனம் செய்யப் பட்டான். மக்களால் மோசமாக நடத்தப் பட்டான். ஒவ்வொரு வாசலிலும், “போய் விடு. போய் விடு!” என்று விரட்டப் பட்டான். பேரரசர் என்பது உள்முகமாக ஆகி, விழிப்போடு இருந்திருந்தால், வாளை எடுத்திருப்பான். ஆனால், அப்படிப் பட்ட எண்ணம், பேரரசர் என்பதெல்லாம், மங்கிப் போய் விட்டது. அவரால் மறக்கடிக்கப்பட்டு விட்டது. இது சரியானதுதான்; அவரைப் பற்றி மறந்து விட்ட நடைமுறை என்ற ஒன்றை மறந்து விட்டது நல்லதுதான். மேலும் எவ்வாறு அவனால், ஞாபகப் படுத்த முடியும்? 24 மணி நேரமும் எல்லா பக்கங்களில் இருந்தும், ஒன்று மட்டுமே அவனால் நினைவு படுத்த முடிந்தது; அதாவது நீ ஒரு பிச்சைக் காரன் என்பதையே! வாசலில் நிற்பதற்குக் கூட ஒருவரும் அனுமதிக்கவில்லை; அவனை மரத்தின் அடியில் உட்காருவதைக் கூட அனுமதிப்பதில்லை; அவனை நிற்கக் கூட அனுமதிக்காமல் மக்களால் விரட்டப்பட்டான். “மிகவும் அரிதாகவே, அவருக்கு, சிறிது ரொட்டித் துண்டும் கூட கிடைப்பதுண்டு.”

 உடைந்த பானை! கிழிந்த ஆடைகள்! 20 வருடங்களில் புதிய துணி கூட வாங்கிட முடியவில்லை. அவனது உடல் துர்நாற்றம் வீச ஆரம்பித்து விட்டது. நறுமணமுள்ள நாட்கள், அரண்மனை வாழ்க்கை; பெருமையான, வசதியான, மகிமை வாய்ந்த மேலும் கௌரவமான வாழ்க்கை அனைத்தும் மறக்கடிக்கப் பட்டு விட்டன. 20 வருடங்களாக, அந்த கண்ணாடியில் அதிக அளவு தூசி படிந்து இருந்தன. ஆகவே, இப்போது அதில் எந்த ஒரு உருவமும் கூட உருவாகிட முடியாத ஒரு நிலை.

 ஆகவே, அந்த மகனுக்கு எதுவுமே தெரியவில்லை; மற்ற கிராமங்களுக்குச் சென்று பிச்சை கேட்பது போல், அவன் இந்த கிராமத்திற்கு வந்தான். மற்ற கிராமங்களைப் போன்று, இதுவும் கூட ஒன்று. ஆனால் அந்த அப்பாவின் கண்கள், அவனைப் பார்த்த போது, இதுதான் தனது மகன் என்பதை அவரால் அடையாளம் காணமுடிந்தது.

 அந்த அம்சங்கள், அந்த முகம் அடையாளம், கண்டு பிடிக்கப்பட்டது. எவ்வளவு தூசி இருந்த போதிலும் பரவாயில்லை; பெற்றோரின் கண்கள் ஏமாற்றப்பட முடியவில்லை. அந்த மகன் மறக்கலாம்; ஆனால் அந்த அப்பாவால் மறக்க முடியவில்லை. அந்த அசல் மூலாதாரத்தால் மறக்க முடியவில்லை.  

 மகனின் இந்த நிலைமையைப் பார்த்துக் கொண்டு இருந்த அரசரின் நிலையான உணர்ச்சியற்று மேலும் உயிரே இல்லாத ஒரு நிலைக்குப் போய் விட்டது போலத் தோன்றியது. அரசர் மந்திரியை அழைத்தார். அவரிடம் கூறினார்,” கவனமாக இருங்கள்; விவேகமாக நடந்து கொள்ளுங்கள். உடனே, நீ ஒரு இளவரசன் என்று தெரிவித்தால், பிறகு இது அவனுக்கு மிகப் பெரிய ஒன்றாக தோன்றி விடும். அதாவது, இதை, அவன் நம்பவே மாட்டான். அவன் உங்களையே சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விடுவான். ஆகவே நீங்கள் மெதுவாக செயல்பட்டாக வேண்டும். அவன் உண்மையிலேயே எல்லாவற்றையும் மறந்து போய் விட்டான். இல்லை என்றால், இந்த இடத்திற்கு பிச்சை எடுக்க வந்து இருக்கவே மாட்டான். அவனுக்கு எந்த ஒன்றுமே ஞாபகத்தில் இல்லை.

 அரசர், அவனை அரண்மனையின் உள்ளே அழைத்த போது, அவன் அரண்மனையை விட்டு, வெளியே ஓட ஆரம்பித்தான். வேலைக் காரரும் அவன் பின்னால் ஓடிய போது அவன் கூறினான், “இல்லை சகோதரரே! நான் உள்ளே வர விருப்பம் கொள்ளவில்லை. என்னை விட்டு விடுங்கள். நான் ஒரு ஏழை மனிதன். நான் அரண்மனைக்கு வந்து, இன்னும் அரச அவைக்கு வந்ததும் தவறுதான். நான் உள்ளே போவதற்கு தேவை இல்லை. “

 அவன் மிகவும் பயந்து போனான். அதாவது அவன் நினைத்தான். அதாவது அவனுக்கு தண்டனை கிடைத்து விடும்; கைதியாக்கி விடுவார்கள்; தான் உள்ளே சென்றால், என்னென்ன கஷ்டங்கள் வரப் போகின்றதோ என்று பயம் கொண்டான். ஆனால் அந்த வேலைக் காரர்கள் விவரித்தார்கள். எங்களுடைய எஜமானர், உங்களுக்கு ஒரு வேலை கொடுக்க விரும்புகின்றார். நீங்கள் பாவம் என்று அவர் உணர்கிறார். எனவே, அவர் உள்ளே சென்றார். அந்த அவனை, ஒரு துப்புரவு தொழிலாளியாக பணியமர்த்தச் செய்தார்.

 பிறகு படிப்படியாக, அவர் துப்புரவு பணியை செய்யத் தொடங்கினார். மேலும் அரண்மனையோடு சிறிது பரிச்சயமானவன் என்றும் ஆனார். பிறகு, அரண்மனையின் உள்ளே வரத்தொடங்கினார். விரைவிலேயே அவருடைய உடைகள் கூட மாறத் தொடங்கின. பிறகு அவருக்கு, ஒரு குளியலும் கொடுக்கப்பட்டது. மேலும் மெதுவாக ஒப்புக் கொள்ளும் நிலைக்கு ஆளானார்.

 இந்த மாதிரியான வழியில், வருடங்கள் கழிந்து சென்றன; அவருக்கு ஒரு மந்திரி பதவி கொடுக்கப்பட்டது. பிறகு ஒரு நாள், அந்த பேரரசர் அவரை அழைத்துக் கூறினார். “நீதான் என்னுடைய மகன்.”என்றார் அரசர். அவரும் சம்மதித்தார்.

 பிறகு அவர் நம்பி ஏற்றுக் கொண்டார்; அவர் நிறைய படிகள் ஏறியாக வேண்டி இருந்ததை ஏற்று கொண்டார். இந்த விஷயம், முதல் நாளே கூறப்பட்டு இருக்கலாம்; ஆனால் அதன் பிறகு, இதை நம்பி, ஏற்றுக் கொண்டிருக்கவே முடியாது போயிருக்கும்!

 யாராவது நம்மைப் பார்த்து, நீங்கள் கடவுள் என்றால், நம்மால் அதனை ஒரு போதும் நம்ப முடியாது. நாம் கூறலாம்; இது ஒரு கோட்பாடு பற்றிய விஷயம் என்று இருக்கலாம்; ஆனால் அது எனக்கும் மேலும் கடவுளுக்கும் என்றாகும் !!!  

 இது ஏன் கூறப்படுகிறது என்றால், அதாவது தியானம் செய்தால், பக்தியில் மூழ்கிடலாம் வாருங்கள்; தொடங்குவோம் துடைப்பது மற்றும் சுத்தம் செய்வதோடு. அது இப்போது செய்ய முடியும் என்றாலும், நாம் ஒரு போதும், அதற்கு சம்மதிக்க மாட்டோம். ஒரு சிறிய கணத்தைக் கூட அங்கே இழக்கத் தேவை இல்லை என்ற போதிலும், அங்கே படிப்படியான அபிவிருத்தியும் தேவை இல்லை. இதை ஒரே அடியிலும் கூட நடந்து வந்து விட முடியும். ஆனால் நாம் இதனை நம்புவது இல்லை. ஆகவே நாம் துடைப்பதையும், சுத்தம் செய்வதையும் செய்யலாம். ஆகவே அங்கே படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். மேலும் நாம் மெதுவாகவும், படிப்படியாகவும் முன்னேற்றத்திற்கும் செல்லலாம்.

 அந்த ஒரு நாள், அந்த கடைசிக் கணம் வந்தது; நாமும் அந்த மந்திரி பதவிக்கு வருவோம்; சமாதியின் சிறிய கீற்று, தியானத்தின் போது அருகே வரத்தொடங்கும். தியானம் ஒளிரத் தொடங்கும்; பிறகு ஒரே ஒரு சிறிய கணத்தில் நாம் அந்த விஷயத்தை ஏற்றுக் கொள்வோம். அப்போது, நாம் இந்த விஷயத்தில், நம்பிக்கை வைத்திருப்போம

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...