முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புனித அன்னை ரபியா அன்பால் நிரம்பிய மேன்மையான இதயம்


இதயத்தில் அன்பு இருந்தால், சாத்தானின் மனதில் கூட வெறுப்பு எழாது.  

  ரபியா இஸ்லாம் மதத்தைச் சார்ந்த, ஒரு புனித துறவி. உலக வரலாற்றில் பெண் துறவிகளுக்கான வரிசையில், ரபியாவுக்கு ஒரு விஷேடமான இடம் உண்டு. சூஃபி இயக்கம் தோன்ற காரணமானவர் புனித ரபியாதான். இன்றும் உலகம் அவரை மிகவும் போற்றத் தக்க வகையில் நினைவில் வைத்து இருக்கிறது.    

  மிகவும் புகழ்வாய்ந்த இந்த பெண் துறவி தன் வாழ்நாளில் ஒவ்வொரு நாளுமே அன்பாலும் கடவுளின் நிலையான நினைவிலும் வாழ்ந்தார். இவர் கிபி. 717 –இல் பிறந்து கிபி. 801 –இல், அவரது 84 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

  ரபியா மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தில், தன் பெற்றோருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தவள். அவள் குழந்தையாக இருக்கும் போதே, அவள் அம்மா இறந்து விட்டாள். அம்மாவின் அன்பும், அரவணைப்பும் இல்லாமல், அவளது குழந்தைப் பருவம் தனிமையில் கழிந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவளது துன்பங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

  அவளது நாட்டில் மிகப் பயங்கரமான தண்ணீர் பற்றாக்குறையும், உணவுப் பஞ்சமும் ஏற்பட்டது. இதன் விளைவாக ரபியாவின் குடும்பத்தினர் அனைவரும் தனித்தனியாக ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தனர்.   

  சின்னஞ்சிறு சிறுமியான ரபியாவும் கடத்தப் பட்டாள்; அவள் வெறும் 6 டிர்ஹாம்ஸ் –க்கு அடிமையாக விற்கப்பட்டாள். அவளை அடிமையாக வாங்கிய அந்த எஜமானன் இதயமே இல்லாத ஒரு கொடுமைக்காரன். ரபியாவை அந்த மனிதன், மனிதத் தன்மை சிறிதும் கூட இல்லாமல் நடத்தினான். சாப்பிடுவதற்கு எதுவுமே கொடுக்காமல், நாள் முழுவதும் வேலை வாங்குவான்.

  இந்த நிலைமையில் உடல் உழைப்பு என்பது மிகவும் கடினமானது. ஆனால், இந்த நிலைமையிலும் ரபியாவின் இதயம் எப்போதும் கடவுள் நினைவிலேயே மூழ்கி இருக்கும். இரவில் வெகு நேரம், விழித்து இருப்பாள். தன்னுடைய அதிகமான பொழுதை கடவுளைத் தொழுவதிலும், தியானம் செய்வதிலும் செலவழித்தாள்.    

  ஒரு நாள், அவள் எஜமானன் இரவில் வெகு நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பினார். தற்செயலாக ரபியா இருக்கும் அறையைக் கடந்து செல்லும் போது, அங்கிருந்து ரகசியமான பேச்சுக் குரல் கேட்டது. உடனடியாக அவனுக்கு மனதில் சந்தேகம் எழ ஆரம்பித்தது. என்னுடைய அடிமை இரவில் இவ்வளவு நேரம் விழித்திருந்து, யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் ? 

  ஜன்னல் வழியாக அவர் பார்த்த காட்சியும், அறையில் அவர் கேட்டதும் அவரை பேரதிர்ச்சி அடையச் செய்தன. 

  ரபியா முழுவதுமாக தெய்வீகத்தில் மூழ்கி இருப்பதை அவர் பார்த்தார். தெய்வீக ஒளி அவளை முழுமையாக சூழ்ந்து இருந்தது. அவள் முட்டுப் போட்டு தொழுது கொண்டிருந்த காட்சியில், தேவதை ஒருத்தி கடவுளை நோக்கி வணங்குவதைப் போல இருந்தது. அவள் மென்மையான குரலில், “ஓ பிரபுவே, என் எஜமானரை மன்னித்து விடு. அவரை ஆசீர்வதியுங்கள். “

  ரபியா, தன் எஜமானர் தன்னை மோசமாக நடத்திய போதும், அவருக்காக எப்போதுமே கடவுளிடம் தொழுது கொண்டிருப்பாள். அந்த எஜமானர் அவளை எத்தனையோ முறை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்; வார்த்தைகளால் மட்டுமல்லாமல் நிறைய தொல்லைகளும் கொடுத்திருக்கிறார்; அப்படி இருந்தும் அவரை ஆசீர்வதிக்கும் படி கடவுளிடம் வேண்டுகிறார். 

  அல்லா! என் மாஸ்டர் மீது கருணை காட்டுங்கள்; அவருக்கு செல்வத்தை அருளுங்கள்; அவருடைய தவறுகளை மன்னித்து விடுங்கள்; அவரை நேர்மையான வழியில் அழைத்துச் செல்லுங்கள்; அவர் உங்களிடம் வரும்படி அவருக்கு ஏதாவது செய்யுங்கள். கடவுளே, என்று தொழுதாள். நீங்கள் எப்போதும் அன்பால் நிறைந்தவர். தயவு செய்து, என் எஜமானருக்கு உங்கள் இதயத்தில் இடம் கொடுங்கள்.  

  இதையெல்லாம் பார்த்த எஜமானர் ஒட்டு மொத்தமாக அதிர்ச்சி அடைந்தார். வெட்கத்தால் நடுங்கினார். அவளின் பிரார்த்தனையைக் கேட்டு குற்றவுணர்வுக்கு ஆளானார். அவர் தன்னுடைய அறைக்குத் திரும்பினார். இரவு முழுவதும் அவரால் தூங்கவே முடியவில்லை. ரபியாவுக்கு தான் மிகப்பெரிய அநீதி இழைத்து விட்டதை உணர்ந்தார். தான் கடுமையான குற்றத்திற்கு ஆளாகி விட்டதையும் உணர்ந்தார். இவள் சாதாரணமான அடிமை அல்ல; கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்ட ஒரு குழந்தை; இவள் ஒரு தெய்வீக ஆன்மா, என்பதைப் புரிந்து கொண்டார். நான் இவளை அடிமையாக வேலை செய்யும்படி நடத்தி இருக்கிறேன்.

  அடுத்த நாள் காலை அவர் ரபியாவின் அறைக்குச் சென்று அவள் பாதங்களில் விழுந்து, மன்னிப்புக் கேட்டார்: “கடவுளின் அன்புக் குழந்தையே! நான் உனக்கும், அல்லாவுக்கும் செய்த தவறுகளுக்காக தயவு கூர்ந்து என்னை மன்னித்து விடு; இன்றிலிருந்து நீ என் வீட்டில் வந்து தங்க வேண்டும்; அடிமையாக என் வீட்டில் இருக்க வேண்டாம்; ஆனால், மரியாதைக்குரிய ஒரு விருந்தினராக நீ இருக்க வேண்டும். தயவு செய்து நான் அந்த மாபெரும் அல்லாவுக்கும் தொண்டு செய்ய எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடு” என்று வேண்டினார்.

  குழந்தையும் தெய்வமும் 
  குணத்தால் ஒன்று.
  குற்றங்களை மறந்து விடும்
  மனத்தால் ஒன்று.
  கள்ளமில்லா உள்ளத்தினால்
  பிள்ளைகள் எல்லாம் என்றும்
  கண்ணெதிரே தோன்றுகின்ற
  தெய்வங்கள் ஆனார்.     
– என்ற கவியரசின் பாடல் வரிகள் ரபியாவின் வாழ்க்கைக்கு நிரூபணம் ஆகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...