முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசைகள்

 ஒரு சமயம் ஒரு வியாபாரி, ஒரு துறவியைத் தன் வீட்டிற்கு மதிய நேர உணவிற்காக அழைத்தார். ஆனால் அன்று, அந்த துறவி ஏகாதசி விரதம் மேற்கொண்டு இருந்தார். அவரால் அங்கே போக முடியாமல் போனது. எனவே, அவர் தனது சீடர்கள் இருவரை, வியாபாரியின் வீட்டிற்கு சாப்பிட அனுப்பி வைத்தார் … ஆனால், அந்த இரண்டு சீடர்களும் திரும்பிய நிலையில், ஒருவர் வருத்தமாக இருந்தார்; இன்னொருவர் மகிழ்ச்சியாக இருந்தார்!

 அந்த துறவிக்கு இதைப் பார்த்ததும், ஒரே வியப்பு; அவர் கேட்டார்,”மகனே, நீ ஏன் வருத்தமாக இருக்கின்றாய்? அந்த வியாபாரி, அவருடைய விருந்தோம்பலின் போது, ஏதேனும், வேறுபாட்டை, உங்களிடையே, காட்டினாரா?“

 “இல்லை மாஸ்டர்.”

 “நீங்கள் அமரவைக்கப்படுவதில், ஏதேனும் வேறுபடுத்திக் காட்டினாரா?”

 “இல்லை, மாஸ்டர்.”

 “ அந்த வியாபாரி தட்சிணை கொடுப்பதில் ஏதேனும், வேறுபாடு செய்தாரா?”

  “இல்லை குருஜி. அவர் எங்கள் இருவருக்குமே, சமமாகவே, தொகையைக் கொடுத்தார். எங்கள் ஒவ்வொருவருக்கும் சமமாக 2 ரூபாய் கொடுத்தார்.”

 இப்போது, குருஜி, இன்னும் அதிக அளவு வியப்பு அடைந்து கேட்கலானார். “பிறகு நீ வருத்தம் கொண்டு இருப்பதற்கான காரணம்தான் என்ன? மேலும், இந்த சீடர் பார்ப்பதற்கு அதிகமான அளவுக்கு, மகிழ்ச்சியாக இருக்கின்றாரே.”

 அந்த வருத்தமான சீடர் கூறினார்,“ குருஜி, நான் வழக்கமாக நினைப்பது உண்டு; அதாவது அந்த வியாபாரி மிகவும் பணக்கார மனிதர். எனவே, அவர் எங்களுக்கு குறைந்த பட்சம், ரூபாய் 10 தட்சணையாகக் கொடுத்திடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவரோ, வெறும் 2 ரூபாய் மட்டுமே கொடுத்தார். அதனால்தான், நான் வருத்தமாக இருக்கிறேன்!!”

 அப்போது, அந்த துறவி, அடுத்த சீடரிடம் கேட்டார். “நீ ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறாய்?”. அந்த சீடர் கூறினார், “குருஜி, அந்த வியாபாரி மிகப் பெரிய கஞ்சன் என்று நன்றாகவே தெரியும். எட்டணாவுக்கு மேலே, அவர் தட்சணை தர மாட்டார் என்று நான் கருதினேன். ஆனால், அவரோ 2 ரூபாய் கொடுத்து விட்டார். ஆகவே, நான் மகிழ்ச்சியாக ஆகி விட்டேன். …!”

 “நண்பர்களே, இவ்வாறுதான், நமது மனநிலை இருக்கிறது. உலகில் உள்ள அனைவருக்குமே, நடக்கின்ற சம்பவங்கள் எல்லாமே, ஒரே மாதிரியாக சமமாகவே நடக்கிறது. ஆனால், சில பேர், அந்த நிகழ்வுகளில் இருந்து மகிழ்ச்சி அடைகிறார்கள். இன்னும் சில பேர் வருத்தம் அடைகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், வருத்தம் என்பதும் இல்லை அல்லது மகிழ்ச்சி என்பதும் இல்லை. அவை எதுவென்றாலும், நம்முடைய மனநிலையைப் பொறுத்தே அவை அமைகின்றன! மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறா விட்டால், பிறகு அங்கே வருத்தம் ஆகிறது; அதே வேளையில், ஆசைகள் நிறைவேறி விட்டால், பிறகு அங்கே மகிழ்ச்சி இருக்கும். ஆனால், அங்கே ஆசையே இல்லை என்று ஆகி விட்டால், அதன் பிறகு அங்கே இருப்பது பேரானந்தமே தான்.!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...