முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோடீஸ்வர மனிதர்



ஜான். டி. ராக்ஃபெல்லர் என்பவர்தான் உலகத்திலேயே முதல் கோடீஸ்வர மனிதர்; மிகப்பெரிய பணக்காரரும் ஆவார். 

 அவரது 25 வது வயதிலேயே, அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொண்டார். 31 வது வயதில், உலகத்திலேயே மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனர் ஆனார். 38 வது வயதில் அமெரிக்காவின் 90% சுத்திகரிப்பின் நிறுவனர் ஆனார். தனது 50 வது வயதில் அந்த நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார்.    

 அவருடைய மரணம் வரைக்கும், ராக்ஃபெல்லர்தான் உலகிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரராக இருந்தார். அவர் இளைஞனாக இருக்கும் போது, அவர் எடுக்கும் முடிவு; அவரது மனப்பாங்கு; அவர் மற்றவர்களுடன் வைத்திருந்த உறவு முறை – இவைதான் அவருடைய தனித்துவமான சக்தியையும், செல்வத்தையும் பெறுவதற்கு அவரை வடிவமைத்தன.
 ஆனால் அவருடைய 53 வது வயதில், அவர் மிகவும் மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்டார். அவரது உடல் முழுவதும் தாங்க முடியாத வலியால் வேதனைக்கு உள்ளானார்; அவரது தலைமுடி முழுவதுமாக உதிர்ந்து விட்டது.

 உலகிலேயே ஒரே கோடீஸ்வரரான அவர், இந்த உலகில் எதை வேண்டுமானாலும் வாங்கும் சக்தி படைத்தவர் அவர்! முழுவதுமாக வேதனையால் துடித்துக் கொண்டு இருக்கும் அவரால், வெறும் காய்கறி சூப் மற்றும் பிஸ்கட் போன்ற மென்மையான பொருட்களைத் தவிர வேறு எதையும் அவரால் சாப்பிட்டு ஜீரணிக்க முடியவில்லை.   

 ராக்ஃபெல்லருடன் இருக்கும் அவர் உதவியாளர் அவரது நிலைமையைப் பற்றி, பின் வருமாறு எழுதினார்.
“அவரால் தூங்க முடியவில்லை; சிரிக்கவும் கூட முடியவில்லை; எதுவுமே செய்யமுடியாமல் ஒரு நடைபிணம் போல இருந்தார்.”

 ராக்ஃபெல்லருடைய திறமைவாய்ந்த சொந்த மருத்துவர்கள் அவர் இன்னும் ஒரு வருட காலம்தான் உயிரோடு வாழமுடியும் என முன்கணிப்பு செய்தனர்.

 வலியோடும், வேதனையோடும் அந்த ஒரு வருடம் மெதுவாகக் கடந்தது.

 அவருடைய முடிவு நெருங்கிக் கொண்டிருக்கும் தருவாயில், ஒரு நாள் காலை விழித்தெழுந்ததும் அவருக்கு ஒரு மெய்யுணர்தல் ஏற்பட்டது. அதாவது, தான் சேர்த்து வைத்திருக்கும் இந்த செல்வத்தை தன்னுடன் அடுத்த உலகத்துக்கு கொண்டு செல்ல முடியாது என உணர்ந்தார்.

 ஒட்டு மொத்த இந்த வணிக உலகத்தையே அடக்கி ஆண்ட இந்த மனிதனால், தன்னுடைய உடல் நலத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பதை உணர்ந்தார்.

 அவருக்கு இப்போது ஒரே ஒரு வழிதான் இருந்தது. அவர் தன்னுடைய சட்ட நிபுணர்கள், கணக்காளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் அழைத்தார். அவர்களிடம், தன்னுடைய சொத்துக்களை மருத்துவ மனைகள், ஆராய்ச்சி மையங்கள், தரும செயல்களுக்குக் கொடுக்கப் போவதாக அறிவித்தார்.

 இவ்வாறாக ராக்ஃபெல்லர் அவருடைய அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளையின் உதவியால் பென்சிலின் கண்டுபிடிக்கப் பட்டு, அது மலேரியா, காச நோய் மற்றும் டிப்தீரியா முதலிய நோய்களை குணப்படுத்தியது.
   

 ராக்ஃபெல்லரின் கதையில், மிகவும் வியக்கத்தக்க பகுதி இதுதான். அதாவது அவரது வருமானத்தில் ஒரு பகுதியை மற்றவர்களுக்காக திருப்பிக் கொடுத்த அந்த சமயத்திலேயே, அவரது உடலின் இயக்கங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் நல்ல முறையில் குணமடையத் தொடங்கினார்.

 அந்த நிலையில், 53 வயதில் இறந்திருக்க வேண்டிய அவர் 98 வயது வரை உயிர் வாழ்ந்தார்.
  

 நன்றியறிதலைக் கற்று அறிந்தவுடன் ராக்ஃபெல்லர் தனது செல்வத்தின் மிகப் பெரும் பகுதியைத் திருப்பிக் கொடுத்தார். இப்படி செய்தது அவரைக் குணப்படுத்த மட்டும் செய்யவில்லை; அவரை ஒரு பூரணத்துவமான மனிதனாகவும் மாற்றியது. குணப்படுத்துவதற்கான வழியை அவர் கண்டு பிடித்தார்; மேலும் முழுமையாக உணரவும் ஆரம்பித்தார்.

 விவேகானந்தருடனான அவரது சந்திப்பு, முதன் முதலாக ஒரு பெரிய அளவிலான நன்கொடையை பொதுமக்களுக்கு கொடுக்கும்படி செய்தது. படிப்படியாக அவர் ஒரு சிறந்த நன்கொடையாளர் ஆனார். ராக்ஃபெல்லரின் கொடைத்தன்மையானது ஏழை மக்களுக்கும்; கஷ்டத்தில் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கும் ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று விவேகானந்தர் குறிப்பிட்டார்.

 தன்னுடைய மரணத்திற்கு முன்பாக ராக்ஃபெல்லர் தன் நாட்குறிப்பில் பின் வருமாறு எழுதினார்.
 “வேலை செய்வதற்கும், விளையாடுவதற்கும்  
நான் கற்பிக்கப் பட்டேன்.
என்னுடைய வாழ்க்கை, நீண்ட வாழ்க்கை, மகிழ்ச்சியான விடுமுறை; முழுவதும் பணி முழுவதும் விளையாட்டு.
இந்த வழியாக என் கவலைகளை முற்றிலுமாக விட்டு விட்டேன். ஒவ்வொரு நாளும் கடவுள் எனக்கு நல்லதையே செய்தார்.“

பிறருக்குக் கொடுக்கும் மகிழ்ச்சியில்தான் வாழ்க்கையின் மகிழ்ச்சி இருக்கிறது.

தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்.
அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்  
ஆனந்த பூந்தோப்பு.
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை 
இது நான்கு மறை தீர்ப்பு – என்ற கவிஞரின் பாடல் வரிகளும் ராக்ஃபெல்லரின் கதையை நிரூபணம் ஆக்குகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...