முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோடை மழையில் நனைவதன் விளைவுகள்..!!

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
                   

💥...குளிர்ச்சி கொடுக்கும் கோடை மழை☔.. நனைவது நன்மையா?🌟.. 

☔ கோடை வெயிலை தணிக்க அடிக்கடி கோடை மழை பெய்யும். நாமும் கோடை வெயிலில் இருந்து விடுபட்ட சந்தோஷத்தில் அந்த மழையில் நனைவோம். இல்லையெனில், மகிழ்ச்சியாக அதில் விளையாடுவோம்.

☔ இப்படி திடீரென பெய்யும் கோடை மழையில் நனைவது மகிழ்ச்சியாக இருந்தாலும் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும்.

☔ கோடை மழையில் நனைவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு!!!

☔ கோடை மழை வெப்பத்தை குறைத்து, குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சூழலை உருவாக்கலாம். அந்த மழையை பார்க்கும்போது நமக்கு மன நிம்மதி கிடைக்கலாம்.

☔ ஆனால் கோடை மழையில் நனைந்தால் சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

☔ சிலருக்கு அலர்ஜிகள் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படலாம்.

☔ சிலருக்கு, மழைநீரில் உள்ள மாசுக்கள் தோல் அரிப்பு மற்றும் தோல் நோய்களை ஏற்படுத்தலாம்.

☔ கோடை மழை பெரும்பாலும் குளிர்ந்த காற்றுடன் வருகிறது. இது மூக்கடைப்பு மற்றும் தொண்டை சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

☔ கோடையில் பெய்யும் மழையால் டைபாய்டு நோய் அதிகரிக்கும். இந்த நோய் காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.

☔ கோடை மழை பெய்தால் கொசுக்கள் அதிகம் காணப்படும். இந்த கொசுக்கள் கடித்தால் மலேரியா நோய் ஏற்படலாம்.

☔ கோடை மழையின்போது டெங்கு காய்ச்சல் மற்றும் பிற வகையான காய்ச்சல்கள் அதிகரிக்கும்.

கோடை மழையில் வெளியில் செல்பவர்களுக்கான சில குறிப்புகள்:

☔ மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும்போது வெளியில் செல்வதை தவிர்த்திடுங்கள்.

☔ மழை பெய்யும் போது சாலைகளின் தன்மை மாறுபட்டிருக்கும், இதனால் வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கவனமாக வாகனம் ஓட்டுவது அவசியம்.

☔ மழைநீரில் நனைந்தால் ஈரமான உடைகளில் நீண்ட நேரம் இருப்பது குளிர்ச்சியை ஏற்படுத்தி உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

☔ முடிந்தவரை மழையில் நனைவதைத் தவிர்க்கவும். 

☔ மழை பெய்யும்போது குடை அல்லது ரெயின்கோட் பயன்படுத்தவும். இது உங்களை மழையிலிருந்து பாதுகாக்கும்.

☔ ஈரமான தரையில் நடந்து செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், வழுக்கி விழும் அபாயம் உள்ளது. மழைநீர் தேங்கியுள்ள குழிகளில் கால் வைக்க வேண்டாம்.

☔ உடல்நிலை மற்றும் வானிலை நிலைமைகளை பொறுத்து, கோடை மழையில் வெளியே செல்வது உங்களுக்கு பாதுகாப்பானதா என்பதை தீர்மானிக்கவும்.

☔ கோடை மழையில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை பாதுகாப்பாக பராமரியுங்கள்.

☔ கோடை மழையில் வெளியே செல்வது மகிழ்ச்சியாக இருந்தாலும், அதைவிட பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும். எனவே, கோடை மழையில் சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலம், உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் மற்றும் ஆரோக்கியமாக இருக்கலாம்.


✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...